ரஜினியின் '2.0' வசூல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் தகவல்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பொதுவாக தான் இசையமைத்த படமாக இருந்தாலும் பெரிய அளவில் புரமோஷன் செய்ய மாட்டார். ஆனால் ரஜினியின் '2.0' குறித்த பல தகவல்களை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், சற்றுமுன் 2.0 படத்தில் 4 நாட்கள் வசூல் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

2.0' திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் தென்னிந்திய திரைப்படம் ஒன்று நான்கு நாட்களில் செய்த அதிகபட்ச தொகையை 2.0 வசூல் செய்துள்ளதாகவும், இதற்கு முன்னர் இந்த சாதனையை தக்க வைத்திருந்த 'ரங்கஸ்தலம்' என்ற தெலுங்கு படத்தின் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 

More News

நயன்தாரா நாயகனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட ஐஸ்வர்யா தத்தாவுக்கு கடந்த சில வாரத்தில் ஒருசில திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவது தெரிந்ததே.

நாசர் மகனை நெகிழ்ச்சி அடைய செய்த விஜய்

நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மறுபிறவி எடுத்து பிழைத்தார்

சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் படங்கள்

கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச சென்னை திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் 16வது விழா வரும் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

போராட்டம் நடத்தி திரும்பி வந்த விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளும் போராட்டம் செய்தனர்.

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா

சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு,