மீடூ பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் முதல்முறையாக சின்மயி புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மீடூ குறித்த தகவல்களை பார்த்து கொண்டிருக்கின்றேன். குற்றஞ்சாட்டிய, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருசிலர் பெயர்கள் அதில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சினிமாத்துறையில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையாகவும் உள்ள துறையாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிக சக்தியுடன் வெளிவர வேண்டும்

நானும் என்னுடைய குழுவும் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், ஒரு பாதுகாப்பான பணிபுரியும் சூழல் உருவாக்கவும், அவற்றின் முலம் சிறந்த கலைஞர்கள் வெற்றி பெறும் சூழலை உருவாக்குவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சமூக வலைத்தளங்கள் ஒரு சிறந்த இடமாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தை தவறாக பயன்படுத்தாத வகையிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் ஆச்சரியமான தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிதான் இன்றைய கோலிவுட் வெற்றி நாயகனின் ஒருவராக உள்ளார். அவர் நடித்த 'செக்க சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96' ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது

ஜிவி பிரகாஷூக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி

ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு, இசை என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐங்கரன்

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிந்திரன்.

'வடசென்னை' படத்தில் நீக்கப்படும் காட்சிகள்: வெற்றிமாறன் அறிவிப்பு

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தள பயனாளிகள்

மீடூ விவகாரம்: இயக்குனர் சுசி கணேசன் நஷ்ட ஈடு கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக மீடூவில் பாலியல் குற்றச்சாட்டுக்களை நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்த பெண்கள் பிரபலங்கள் மீது சுமத்தி வருவதால் தமிழ் திரையுலகே பரபரப்பில் உள்ளது.