உதயநிதிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் உதவி

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

நடிகர் உதயநிதி நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'நிமிர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'நெஞ்சில் மாமழை' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இளம் இசையமைப்பாளர்களான தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இந்த பாடலை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உதயநிதி படத்திற்கு ஏ.அர்.ரஹ்மான் இதுவரை இசையமைக்கவில்லை என்றாலும் அவர் நடிக்கும் படம் ஒன்றின் பாடலை வெளியிடும் உதவியை செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷிண்ட பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஒரு போட்டோகிராபராக நடித்திருக்கிறார். உதயநிதியுடன்  நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

நடிகை பாவனாவின் திருமண தேதி எது தெரியுமா?

நடிகை பாவனாவுக்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் எளிமையாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது

எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை: 'அருவி' அஞ்சலியின் அனுபவங்கள்

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உள்பட பிரபலங்கள் அனைவருமே பாராட்டு தெரிவித்துள்ளனர்

இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று உதயநிதியிடம் கூறினேன்: பிரியதர்ஷன்

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்பட பலர் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள படம் 'நிமிர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது

விபச்சாரம் செய்ததாக பிரபல நடிகை கைது

நடிகை ரிச்சா சக்சேனா ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடன் பெங்காலி நடிகை ஒருவரும், தொலைக்காட்சி நடிகை ஒருவரும் கைது செய்யப்பட்டார்

பிரதமர் சொன்ன 150 என்ன ஆச்சு? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் எதிர்பார்த்த குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றது. தற்போதைய தகவலின்படி பாஜக 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னணியில்