கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தாஜ்மஹால், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றை மனைவி குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்த கனடா பிரதமர், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு  பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிய கனடா பிரதமரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கனடா பிரதமரை தனது சமூக வலைத்தளம் மூலம் வரவேற்றுள்ளார். இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்கிறேன். அருமையான நினைவுகளுடன் கூடிய பயணம் அமைய வாழ்த்துகள். இந்தியாவின் விருந்தோம்பலை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் என எண்ணுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது கனடா தலைநகர் டொரண்டாவின் மேயர் 'கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் குடியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் என்பதும், அந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த ரஹ்மான், தான் தமிழ்நாட்டில் சுற்றத்துடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாக கூறி அந்த அழைப்பை அன்புடன் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார்.

இன்று உலகமே ஒரு தமிழனை பார்த்து தலைநிமிர்ந்த நாள் தெரியுமா?

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

வைரலாகும் விஜய்யின் செயல்

ஒவ்வொரு பெரிய நடிகரின் ரசிகர்களும், தங்களுடைய அன்புக்குரிய நடிகரை நேரில் பார்க்கும்போது பெரிய மாலையை அவரது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வழக்கம் உண்டு.

மாரி-2 நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்த நடிகை: வைரலாகும் வீடியோ

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார்

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? எப்போது?

கமல்ஹாசனின் புதிய கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தொடக்கவிழா நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டனர்