சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்த மெர்சல்-சர்கார் கூட்டணி

  • IndiaGlitz, [Friday,July 27 2018]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் விவேக், விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'சர்கார்' படத்திலும் இணைந்துள்ளனர் என்பதையும் சர்கார்' படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார் என்று வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக் கூட்டணி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் இணைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் 14வது படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்குகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்று பாடல்களை எழுத தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் ஆஸ்கார் நாயகனுடன் இணைந்து பணிபுரிவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங் முதன்முறையாக ஜோடி சேரும் இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபு, இஷாகோபிகர், பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

More News

முதலமைச்சர் மகன் கேரக்டரில் கார்த்தி?

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று தெலுங்கில் 'யாத்ரா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. என்பதும்

என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள்: இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்

த்ரிஷா படத்தை ரீமேக் செய்ய விரும்பும் மாதவன்

த்ரிஷா நடிப்பில் இயக்குனர் மாதேஷ் இயக்கிய 'மோகினி' திரைப்படம் நாளை முதல் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ளது.

ஐபிஎல் ஸ்டாருடன் இணைந்த நடிகை அமலாபால்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்டார் வர்ணனையாளராக இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமீர் கோச்சார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.