அமெரிக்காவில் ஒரு நெடுவாசல் போராட்டம்: அர்னால்ட் ஆதரவு

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

சமீபத்தில் தமிழகத்தின் உள்ள நெடுவாசலில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு முயற்சித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் எழுந்தது

இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள பசுபிக் கடற்கரை பகுதியில் எண்ணெய் கிணறு தோண்ட தற்போதைய அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாண ஆளுனராக இருந்தவரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்ட் இந்த முயற்சிக்கு கடும் கண்டனத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எண்ணெய் கிணறு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டம் தான். ஆனால் அதை விட அந்த பகுதியில் வாழும் மக்களின் உணர்வு முக்கியமானது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த பகுதியின் சுற்றுலாத்துறை மற்றும் கடல் உணவுத்துறை பாதிக்கப்படும். எனவே இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மேலும் இந்த திட்டத்தால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவதற்கு நல்ல காற்று கூட கிடைக்காமல் போய்விடும்' என்று கூறியுள்ளார். அர்னால்டின் இந்த எதிர்ப்பு குரலுக்கு ஆதரவு வலுத்து வருவதால் அமெரிக்க அரசு கடும் சிக்கலில் உள்ளது.

More News

சுராங்கனி புகழ் சிலோன் மனோகர் காலமானார்

சிலோன் மனோகர் என்று அழைக்கப்பட்டு வந்த மனோகர் கடந்த 70ஆம் ஆண்டுகளில் இலங்கையில் பாடகாராக இருந்தவர். மேலும் இலங்கையில் தயாரான முதல் தமிழ்ப்படமான 'பாச நிலா' என்ற படத்தில் ஹீரோவாக முதன்முதலாக நடித்தார்.

ராம்கோபால்வர்மாவின் 'God Sex and Truth' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்த 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தின் கவர்ச்சியான ஸ்டில்கள்

நாம் உயிருடன் இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தான் காரணம்: மிஷ்கின்

இயக்குனர்கள் மிஷ்கின், ராம் நடிப்பில் இயக்குநர் G.R. ஆதித்யா இயக்கிய 'சவரக்கத்தி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது ஆபாச விமர்சனம். நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் ஒருசிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.

'தானா சேர்ந்த கூட்டம்' டப்பிங் குறித்து சுரேஷ்மேனன் அதிருப்தி

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவை அடுத்து இந்த படத்தில் பாராட்டுக்களை பெற்றவர் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த சுரேஷ்மேனன்