மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு, கேரள அரசு, தன்னார்வல அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அரியலூரை சேர்ந்த ஹேமா என்ற மாணவிக்கு நீட் தேர்வுக்கான மையம் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

வறுமையின் பிடியில் இருக்கும் ஹேமாவின் குடும்பத்தினர் உடனடியாக எர்ணாகுளம் செல்வதற்கான பயணத்தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் ஹேமாவின் தாய் கவிதா, தன்னிடம் இருந்த ஒரே தங்க பொருளான கம்மலை அடகு வைத்து ஹேமாவின் பயண செலவிற்கு பணம் கொடுத்துள்ளார்.

டாக்டராக வேண்டும் என்ற மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அந்த தாய் செய்த தியாகத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் மொழி தெரியாத மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் தனது மகள் பத்திரமாக தேர்வு எழுதி முடித்து வீடு திரும்ப வேண்டும் என்று அந்த தாய் இறைவனை வேண்டி வருகிறார். ஹேமா போன்ற மாணவ, மாணவிகளுக்காக இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

More News

ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.