இனி பயப்படாமல் கலப்பு திருமணம் செய்யலாம்!!! கேரள அரசின் புதிய நடவடிக்கை

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

சாதி, மதம் மாறி கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கேரள அரசு காப்பகங்களை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. தொடரும் ஆணவக் கொலைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கேரள அரசின் இந்நடவடிக்கை தற்போது வரவேற்பை பெற்றிருக்கிறது.

கலப்பு திருமணத் தம்பதிகளுக்காக கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்களை ஏற்படுத்த சமூக நீதித் துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, கேரளாவின் சமூக நீதித் துறை அமைச்சர் ஷைலஜா “கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

கேரளாவில் கலப்பு திருமணம் செய்வோருக்கு சமூக நீதித்துறை பல நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பொதுப் பிரிவினராக இருந்து வருமானம் ரூ. 1 லட்சத்தை தாண்டாமல் இருக்கும்போது அம்மாநிலத்தில் சுயவேலை வாய்ப்புக்கான நிதியுதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப் பட்டு வருகிறது. கலப்புத் திருமணத்தில் ஒருவர் தாழ்த்தப் பட்டவராக இருக்கும் பட்சத்தில் ரூ. 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

எச்சரிக்கை..! டெல்லி கலவரத்திற்கு எதிராக இரான் தலைவர் கண்டணம்.வைரல் டிவீட்.

உலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்திய அரசானது இந்துத்துவ ஆதரவாளர்கள் மற்றும் அது சார்ந்த கட்சியினருக்கு எதிராக முடிவெடுத்து இஸ்லாமியர் படுகொலைகள் திரும்பவும் நடக்காமல் தடுக்க வேண்டும்

ஜனநாயகத்தை காதலித்த பர்மாவின் பெண் போராளி ஆங் சாங் சூகி; முரணுக்குள் மாட்டிக் கொண்ட வரலாறு

உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

கூட்டமாக கூடுவதைத் தவிருங்கள்..! இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.

மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. N95 முகமூடிகள், சானிடைசர்கள் போன்றவை விலை உயர்த்தி விற்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

சாவுங்கடா..! மற்றவர்களுக்கும் நோய் பரப்பும் நல்லெண்ண சீனர்கள். அதிர்ச்சி வீடியோ.

இது போன்ற செயல்கள் பிறருக்கு நோய் பரப்பும் என்பது மட்டுமல்லாமல் உயிருக்கே உலை வைத்துவிடும். ஏனென்றால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தானே நமக்கும் நடக்கும்.

'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகமா சக்ரா? விஷால் பேட்டி

விஷால் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.