அடிச்சு பழுக்க விடாதேம்மா: ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

சன்டிவியில் ’காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனா, அதன்பின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய சரிகமபதநி’ என்ற நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிரித்த முகத்துடன் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் வல்லவர் அர்ச்சனா என்ற பெயர் அவருக்கு உண்டு. மேலும் அவர் ’என் வழி தனி வழி’ என்ற உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுக்களை பதிவு செய்த நிலையில் ஒரு நெட்டிசன் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கமெண்ட்டை பதிவு செய்தார். அவர், ‘அடித்து பழுக்க விடாதேம்மா, இந்த இளம் தோலுக்கு இவ்வளவு மேக்கப் தகுமா?’என்று அவரது மகளுக்கு போடபப்ட்ட மேக்கப் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

நெட்டிசனின் இந்த கமெண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா ’தனது மகள் காதணி மட்டுமே அணிந்து உள்ளார். அதில் என்ன மேக்கப் இருக்கிறது? வெறுப்புணர்ச்சியை பரப்பிவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


 

More News

ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகள் சவுந்தர்யா குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் சென்றார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

கொரோனா லாக்டௌனில் மதுமிதா செய்த காரியம் 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் காமெடி நடிகை மதுமிதா. 'ஒருகல் ஒருகண்ணாடி'

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர் படிச்சதே மோசடி செய்துதாங்க… அதிபர் மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப்

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா