2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள்… புதைப்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

 

பழங்கால அரச வம்சத்தவர்கள் மற்றும் போர் வீரர்கள் ஆகியோர் உயிரிழக்கும்போது அவர்களின் உடல்களை பதப்படுத்தும் வழக்கம் (மம்மி) எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது. இதேபோல நம்ம ஊரிலும் பல முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது எகிப்து நாட்டின் கொய்ரோ பகுதியின் ஒரு இடத்தில் 2,500 ஆண்டு பழமையான பல மம்மிக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கொய்ரோ பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு இருந்த புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு 100 பழமையான சவப் பெட்டிகளை கண்டுபிடித்ததாகவும் அந்தப் பெட்டிகளில் 2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மம்மிக்கள் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டிகள் வர்ணம் பூசப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள் இது டோலமிட் அரச வம்சத்தினர் காலத்தை ஒத்ததாக இருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் 2,500 ஆண்டு பழமையான மம்மிக்களை அந்நாட்டின் கிசா பிரமிடுகளை ஒட்டியுள்ள கிராண்ட் எகிப்து அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எகிப்து மன்னர்களின் நம்பிக்கைக்கும் அவர்களின் கலை நயத்திற்கும் இதுவரை ஏராளமான சான்றுகள் கிடைத்து இருக்கிறது. அதேபோன்ற ஒரு சான்றாக இந்த மம்மிக்கள் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

More News

சென்னை முதல் குமரி வரை இன்று கனமழை: தமிழ்நாடு வெதர்மேன்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்

டீ குடிக்க சென்ற கேப்பில் அரசு பஸ்ஸை அபேஸ் செய்த வாலிபர்… போதையினால் ஏற்பட்ட பரபரப்பு!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டிரைவர் இல்லாமல் நின்றிருந்த அரசு பேருந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாயில் சஞ்சய்தத்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பதும் அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

கார்த்தியின் அடுத்த பட பூஜை: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.