யாரும் ஓட்டு போடாதீங்க: பொள்ளாச்சி பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறந்தாங்கி நிஷா

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் தங்களுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்துவிட்டனர். இந்த நிலையில் தொலைக்காட்சி புகழ் அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் மட்டும் இந்த கொடுமை நடக்கவில்லை. தினமும் ஒவ்வொரு பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். பெண் குழந்தைகளை கூட இவர்கள் விடுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொண்டு கொன்றுவிடுவார்கள். இனிமேல் அது மீண்டும் தொடரும். 15 வருடம் கழித்து யாரோ ஒருவன் ந,,அ பெண் குழந்தைகளை கொல்வதைவிட நாமே கொன்றுவிடலாம் என ஒவ்வொரு பெற்றோரையும் நினைக்க வைத்துவிடாதீர்கள்

திருநாவுக்கரசு தாயார் நேற்று பேட்டியளித்தபோது, 'யாரோ ஒரு ஐட்டத்தை கூட்டி வந்து வீடியோ எடுத்து மார்பிங் செய்துள்ளதாக கூறினார். அந்தம்மாவுக்கு அறிவே இல்லையா? ஒரு ஐட்டம் கத்துவதற்கும் அபலைப்பெண் கத்துவதற்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?

பெண் குழந்தைகள் இப்போதுதான் அடுப்படையில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து கல்லூரிக்கும் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களை மீண்டும் அடுப்படிக்கே தள்ளிவிடாதீர்கள்.

இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு அரசு பெரிதாக தண்டனை கொடுத்துவிடாது. இன்னும் தஷ்வந்துக்கு சோறு போட்டுக்கொண்டு இருக்கும் அரசாங்கம், இந்த குற்றவாளிகளை மட்டும் என்ன செய்துவிடும். ஒரே ஒரு ஆறுதல் இந்த குற்றவாளிகளுக்கு வாதாட மாட்டோம் என்று கூறிய வழக்கறிஞர்களுக்கு எனது நன்றிகள்

இதற்கெல்லாம் போராட்டம் செய்து டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம். போராட்டம் செய்வதால் எந்தவித பயனும் இல்லை. நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தேர்தல்தான். வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாதீங்க. அல்லது எல்லோரும் நோட்டாவுக்கு போடுங்க. அப்ப கேட்பாங்க ஏன் ஓட்டு போடலைன்னு. அப்போ சொல்லுங்க. பெண் குழந்தைகள் மீது தவறாக நடப்பவர்களை கொல்லும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று. அதற்கு சட்டம் இயற்றுங்கள் என்று சொல்வோம். அதன்பின்னராவது குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

 

 

More News

மக்களவை தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

வரும் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

ஒரு மணி நேரம் அதகளப்படுத்தும் யோகிபாபு: 'பட்டிபுலம்' படம் குறித்து இயக்குனர்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் "பட்டிபுலம்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

மாடல் அழகியிடம் மயங்கி குளியலறையில் சிக்கிய நபர்! ஏலகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி உடல்நலக்குறைவாக இருந்ததால் அவர் பாலியல் புரோக்கர் தொழில் செய்யும் சீனு என்பவரின் பழக்கத்தால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

சிவகங்கையில் எச்.ராஜா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது.