'நினைவிருக்கா? ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மகன் அமீன்.. 'பத்து தல' சிங்கிள் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ என்ற படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையில் அவருடைய மகன் அமீன் பாடிய சிங்கிள் பாடல் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’பத்து தல'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் போஸ்ட் போராட்டத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மறுநாள் அதாவது மார்ச் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியான வீடியோவில் இயக்குனர் கிருஷ்ணா, ஏஆர் ரகுமானிடம் இந்த பாடல் காட்சியின் சிச்சுவேஷனை விளக்க, அவர் அதற்கேற்ற மாதிரி கம்போஸ் செய்கிறார்

மேலும் இந்த பாடலை ஒரு பிரஷ் பாடகர் பாட வேண்டும் என இயக்குனர் வேண்டுகோள் விடுக்க ஏஆர் ரகுமானின் மகன் அமீன் இந்த பாடலை பாட வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ’நினைவிருக்கா’ என்று தொடங்கும் இந்த பாடலின் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

தங்கலான் படம்… ரொம்பவே விறுவிறுப்பான தகவலைப் பகிர்ந்த நடிகை பார்வதி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “தங்கலான்” திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நடிகை பார்வதி

ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி

'காத்துவாக்குல ரெண்டு காதல்': 2 பெண்களுடன் ஒரே நாளில் திருமண செய்த இளைஞர்..!

 தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

டிஜே பிளாக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி.. மாகாபா, ப்ரியங்கா நேரில் வாழ்த்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக்கின் பணி மிகவும் சிறந்தது என்பதும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது