மரியான் பாடலை மழைக்காக மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Friday,January 01 2016]

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடலின் வரியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த பாடலின் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....


நெஞ்சே எழு
நெஞ்சே எழு

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இம்மாதம் 16 ஆம் தேதி சென்னையிலும், 23 ஆம் தேதி கோவையிலும் நடத்தவுள்ள 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சிக்காக மரியான் பாடலான மரியான் படப் பாடலை இந்த நிகழ்ச்சியின் தீம் பாடலாக மாற்றியிருக்கிறார். அந்த பாடலின் வரிகள் பின்வருமாறு:

ஆயிரம் கனவுகள் கலைந்தாலும்
இருளால் காலம் உறைந்தாலும்
கண்ணீர் நதியாய் ஆனாலும்
தூங்கும் நகரம் மிதந்தாலும்
தமிழா நாமும் இணைந்தோமே
மீண்டும் எழுவோமே

நெஞ்சே எழு...
நெஞ்சே எழு'!''

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.