மீசையுடன் புது தோற்றம்: ஏ.ஆர்.ரஹ்மானின் வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் மணிரத்தினம் இயக்கிய ’ரோஜா’ திரைப்படத்தில் அறிமுகமானது முதல் தற்போது வரை அவரை மீசை இல்லாமல் தான் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால் திடீரென மீசையுடன் அவர் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் இசையுலகில் பிரபலமானவர் ஏஆர் ரஹ்மான் என்பதும் இந்தியாவுக்காக அவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் மீசையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ஜூம் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் தான் கலந்து கொண்டு இருப்பதாகவும் மீசையுடன் இருக்கும் தனது புகைப்படத்தில் தனது தோற்றம் எப்படி இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஏராளமானோர் அவரது புதிய லுக்கிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. மீசையுடன் உங்களை காணும் போது நீங்கள் மிகவும் இளமையாக காட்சி அளிக்கின்றீர்கள் தலைவா என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படம் பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் 4 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ அட்லீ இயக்கி வரும் ’ஜவான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவுக்கு பார்சலில் வந்த விருது: வைரல் வீடியோ

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், ஓடிடியில் ரிலீஸான போதிலும்

துபாய் மருத்துவமனையில் நர்ஸ்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்: வைரல் புகைப்படம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார்

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலியானதால் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பாதிப்பை விட தற்போது

அனுவை அடுத்து விஷ்ணு, பிரக்ரிதியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியைப் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. 10 வயதாகும் அந்த வெள்ளைப்புலிக்கு

ரியோவில் கிடைத்த தங்கம் டோக்கியோவில் கிடைக்காதது ஏன்? மாரியப்பன் தங்கவேலு விளக்கம்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும், அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டினர் என்பதும் தெரிந்ததே.