ஏ.ஆர்.ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற சுந்தர் சி

  • IndiaGlitz, [Thursday,July 07 2016]

கோலிவுட் திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் 'பாகுபலி' மற்றும் '2.0' படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது என்பதும் இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் இந்த படத்தை இயக்கும் சுந்தர் சி உள்பட படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'சங்கமித்ரா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய் மற்றும் மகேஷ்பாபு தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், உலக தரத்தில் உருவாகவுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.