விஜய்யின் 'தெறி'யில் ரஜினி-ரஹ்மான்

  • IndiaGlitz, [Thursday,March 17 2016]
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்த விழாவுக்கு முக்கிய விஐபிக்களை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அழைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்நிலையில் இந்த இசை விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய்யின் 'தெறி' படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுதான் ரஜினியின் 'கபாலி' படத்தையும் தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்று முதல் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவுள்ளதால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.