close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாசுக்கு மகேஷ்பாபு விடுத்த வேண்டுகோள்

Friday, September 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் உருவாகி வருவதால் ஒவ்வொரு காட்சியும் இருமுறை படமாக்கப்பட்டு வருகிறது. எனவே மகேஷ்பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் ஆலோசனை செய்து வரும் நிலையில் டைட்டில் குறித்து மகேஷ்பாபு ஒரு வேண்டுகோளை இயக்குனரிடம் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு டைட்டில் வைக்காமல் இருமொழிக்கும் பொதுவான ஒரு டைட்டிலை தேர்வு செய்ய வேண்டும் என்பதே மகேஷ்பாபுவின் வேண்டுகோள்
இந்த டைட்டில் 'எனிமி' போன்ற ஆங்கில வார்த்தைகளிலும் இருந்தாலும் பரவாயில்லை என்றும் ஒரே டைட்டில் முக்கியம் என்பதை படக்குழுவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment