அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்தார் ஜெ. பிரதாப் ரெட்டி 

  • IndiaGlitz, [Saturday,December 16 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால் அதுகுறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு அந்த கமிஷனும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பின்னர் படிப்படியாக ஜெயலலிதாவுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர் ஆகியோர்களும் சிகிச்சை அளித்தனர். இறுதியில் சிகிச்சையின் பலனின்றி ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி திடீர் பல்டியாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்ததாக கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே சாதாரண காய்ச்சல் என்று அறிவிக்கப்பட்டதாகவும், இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்

மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் சிலருக்கு விசாரணை கமிஷனுக்கு சம்மன் வந்துள்ளதாகவும், இதுவரை தனக்கு எந்தவித சம்மனும் வரவில்லை என்றும் அவர் கூறினார்  

More News

ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது

ஒரே வார இடைவெளியில் மேலும் ஒரு ஆபாச நடிகை மர்ம மரணம்

கடந்த வாரம் கனடாவை சேர்ந்த 23வயது ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் என்பவ்ர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்றும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம்

பிரபல அரசியல் தலைவருக்கு கமல் பாராட்டு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சற்றுமுன்னர் ராகுல்காந்தி பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

'அருவி'யை மறைமுகமாக தாக்குகிறாரா லட்சுமி ராமகிருஷ்ணன்?

நேற்று வெளியான 'அருவி' திரைப்படம் ரசிகர்கள், ஊடகங்கள், விமர்சகர்களின் பெரும் பாராட்டை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான்: கங்கை அமரன்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன.