ஆபாச கமெண்ட் பதிவு செய்த ரசிகரை நேரில் சந்தித்து தமிழ் நடிகை கேட்ட அதிரடி கேள்வி!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை ’உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை’ என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை அபர்ணா நாயர் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஆபாச கமெண்ட் செய்த ரசிகரை நேரில் சந்தித்து அவர் கேட்ட அதிரடி கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

’எதுவும் நடக்கும்’ என்ற தமிழ் படத்திலும் பல மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை அபர்ணா நாயர். இவர் சமீபத்தில் தனது முகநூலில் ரசிகர்களிடம் உரையாடியபோது, வக்கிர எண்ணம் கொண்ட ரசிகர் ஒருவர் இவருடைய முகநூல் பக்கத்தில் ஆபாசமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இதனை அடுத்து பொங்கி எழுந்த அபர்ணா நாயர், ‘என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை’ என்று ஆவேசமாக பதிலளித்தார். மேலும் இதுகுறித்து அவர் சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து நடிகை அபர்ணா நாயருக்கு தகவல் அளித்தனர். அதன்பின் காவல்நிலையம் சென்று நேரில் அந்த ரசிகரை சந்தித்த அபர்ணா, ‘ஏன் இப்படி வக்கிர எண்ணத்துடன் கருத்துத் தெரிவித்தீர்கள் என்றும், வழக்கமாக சமூக வலைத் தளங்களில் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அதைப் போலவே கருத்துத் தெரிவித்தேன் என்றும், இனி எந்தப் பெண்ணுக்கும் அப்படி கருத்து பதிவிட மாட்டேன் என்று எழுதித்தர வேண்டும் என்று கூறியதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் அபர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவரை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அபர்ணா தெரிவித்தார். அபர்ணாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

சுஷாந்த் உள்பட 3 பிரபலங்கள் மறைவு குறித்து சிம்பு அறிக்கை!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சிம்புவின் நண்பர் என்பது பலர் அறிந்ததே. அதேபோல் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர்களான

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது.

இவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!!

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கும் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒரு சுவாரசியமான கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்

என்னை தமிழக முதல்வர் ஆக்குங்கள்: ஒரே வாரத்தில் நிலைமையை சரிசெய்கிறேன்: மீராமிதுன் சவால்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வருக்கு சேரன் கூறிய ஐடியா

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது. நேற்று ஆயிரத்துக்கும் குறைவாக கொரோனா நோய் பாதிப்பு அடைந்தவர்கள் இருந்ததால்