திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளீயாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. பிரகாஷ் கோவலமுடி ஏற்கனவே திருமணமாகி மனைவியிடம் விவாகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படம் உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் தற்போது விளக்கமளித்துள்ளார். தனது திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் அதுபோன்ற ஐடியா தனக்கு எப்போதும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் திருமணம் என்பது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் தனது திருமணம் குறித்து ஏன் இவ்வாறு பல வதந்திகள் வெளியாகி வருகிறது என்று எனக்கு புரியவில்லை என்றும் தனது திருமணம் குறித்த செய்திகளுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் மாதவனுடன் அனுஷ்கா நடித்த ’நிசப்தம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

திடீர் நெஞ்சுவலியால் கீழே விழுந்த டிரைவர்: டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவால் பரபரப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார்

திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்ற இளம் பெண் திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இளமதி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா கண்காணிப்பில் இருந்த 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் திடீரென தப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இதுவரை கொரோனா!!! 

கொரோனா நோய் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியது.

கொரோனா பெயரை சொல்லி பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவி: சென்னையில் பரபரப்பு

பேருந்து டிரைவரிடம் உடனடியாக பேருந்து நிறுத்தும்படியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பயமுறுத்திய கல்லூரி மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது