close
Choose your channels

ஆடம்பர காரில் சென்றவரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா ஷர்மா! ஏன் தெரியுமா?

Saturday, June 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் இத்தாலி நாட்டில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இருவருமே இந்திய அளவில் பிரபலம் என்பதால் இவர்கள் பதிவுசெய்யும் சமூக வலைத்தள கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அனுஷ்கா ஷர்மா காரில் சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற ஆடம்பர காரில் சென்றவர்கள் கார் வேகமாக சாலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகளை வெளியே வீசினர். இதனை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அனுஷ்கா ஷர்மா, அந்த காரை விரட்டி அவர்களிடம் குப்பையை சாலையில் ஏன் கொட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அனுஷ்காவின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் அந்த ஆடம்பர காரில் சென்றவர்கள் அமைதியாக தலைகுனிந்தனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை அனுஷ்காவின் கணவர் விராத் கோஹ்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற நபர்களால் இந்தியா எப்படி சுத்தமான நாடாக முடியும் என்றும், இதேபோன்ற சம்பவத்தை நீங்கள் பார்த்தால் உடனே தட்டி கேளுங்கள் என்றும் விராத் கோஹ்லி பதிவு செய்துள்ளார். கோஹ்லியின் இந்த பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment