தெலுங்கில் ரீமேக் ஆகும் 'நெற்றிக்கண்': நயன் தாரா வேடத்தில் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. ‘பிளையண்ட்’ என்ற கொரிய மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து இருந்தார் என்பதும் அவரது நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் நயன்தாரா நடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அனுஷ்கா ஏற்கனவே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக ’சைலன்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும், அந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் கதை தெலுங்கு ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சொந்த குடும்பத்தை மீட்க முடியவில்லை… மன வேதனையில் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன்னுடைய குடும்பத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்க முடியாமல் போய்விட்டது

வரிவிலக்கு வேண்டி மனு அளித்த நடிகர் சூர்யா.......! தள்ளுபடி செய்த நீதிமன்றம் .....!

நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போதைப்பொருள்.....உல்லாசம்..ஆபாச பேச்சு .....! மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி....!

பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் தமிழ் திரைப்பட நடிகை!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை தமிழ் திரையுலக நடிகை ஒருவர் நேரடியாக பார்த்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சீக்கிரமே தமிழ்நாட்டிற்கு வருவேன்: ஆனந்த கண்ணனின் கடைசி வீடியோ!

சன்டிவி பிரபலமும் தொலைக்காட்சி நடிகருமான ஆனந்த கண்ணன் திடீரென நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் சின்னத்திரை, பெரிய திரை உலகினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது