மிகப்பெரிய சோதனை செய்திருக்கிறார்கள்.. மஞ்சுவாரியர் படம் குறித்து அனுராக் காஷ்யப்..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் இது ஒரு பெரிய சோதனை முயற்சி என்றும் இந்த மாதிரி படம் எடுப்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்த ’புட்டேஜ்’ என்ற மலையாள திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஷாக் நாயர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீதரன் இயக்கியுள்ளார் என்பதும் இவர் ஒரு படத்தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் அதை பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘இது மாதிரியான திரைப்படத்தை எடுப்பது மிகவும் கடினம் என்றும் படக்குழுவினர் ஒரு மிகப்பெரிய சோதனை செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக பிடித்துக் கொண்டே இருக்கிறது, இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு ஒரு திறமை வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் அற்புதமாக இருந்தது என்றும் அவர் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது என்பதும் அதில் விஷாக் நாயரை மஞ்சு வாரியர் கட்டி அணைத்திருந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? அப்ப வெற்றிமாறன் படம் என்ன ஆச்சு?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாக

அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவச டிக்கெட்: நாளை வெளியாகும் படக்குழு அறிவிப்பு..!

அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என நாளை வெளியாகும் திரைப்படத்தின் படக்குழு அறிவித்துள்ளது.

த்ரிஷ்யம் 3ஆம் பாகத்திற்கான ஐடியா பிரபல பாடகியிடம் இருந்து கிடைத்தது: ஜித்து ஜோசப்.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம்' மற்றும் 'த்ரிஷ்யம் 2' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில்

ஏற்கனவே நான் ஒரு CM, இனி நானும் ஒரு PM.. மகன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஷோபா..!

ஏற்கனவே நான் CM, என்றும் இனி நான் PM என்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி.. அவரே அளித்த விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளியின் கூட்டாளி என்று கூறப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இது