"மண்டல் கமிஷன் பற்றி தெரியாமல் போராடினேன்.. நான் சாதியவாதி அல்ல"..! அனுராக் காஷ்யப்.

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

என் டீன் ஏஜ் காலத்தில் மண்டல் கமிஷனுக்கு எதிராக போராடியதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என தன்னை சாதியவதி என்றவர்களுக்கு அனுராக் காஷ்யப் பதில் கூறியுள்ளார்.

ட்விட்டரில் மட்டுமே அனுராக் ஆவேசம் காட்டுவதாகவும் களத்தில் நிற்கத் தைரியம் இல்லாதவர் என்றும் ட்விட்டரில் பலர் அனுராக் காஷ்யப்-க்கு எதிராக ட்வீட் செய்து வந்தனர். இதற்குப் பதிலளித்த அனுராக், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மும்பை போராட்டத்தில் கலந்து கொண்டேன். கடந்த 2011-ல் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்திலும் முன்னனியில் இருந்தேன்.

கடந்த 90களில் மண்டல் கமிஷனுக்கு எதிரானப் போராட்டத்திலும் கலந்துகொண்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். மண்டல் கமிஷன் என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ஆதரித்து வழங்கியது. இதற்கு எதிராகப் போராடியதால் அனுராக் சாதியவாதி என்பது தெரிய வந்துள்ளதாக ட்விட்டரில் கண்டனங்கள் கிளம்பின.
ஆனால், இதற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்ட அனுராக் காஷ்யப், “அப்போது எனக்கு 19 வயது. என்னவென்று தெரியாமல் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால், சாதியவாதி இல்லை. என் இளமைப் பருவத்தில் விவரம் இல்லாமல் நிறைய செய்துள்ளேன். ஆனால், இப்போது நான் நிறையவே மாறியுள்ளேன். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் தமிழ்ப்பட நடிகர்!

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் இந்திய நடிகர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது

முகாமிலிருந்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதிய சிறுவன்..! உலகமெங்கும் இருந்து குவிந்த பரிசுகள்.

டெக்ஸாஸில் 7 வயது சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம்தான் நெட்டிசன்கள் பலரை தற்போது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கி அசுரனில் முடிந்துள்ளது: ஜிவி பிரகாஷ்

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் தனக்கு சிறப்பான ஆண்டுகளாக இருந்ததாகவும் இந்த 10 ஆண்டில் தனக்கு பல வெற்றிப்படங்கள்

"என்னால் சூரிய கிரகணத்தை சரியாக பார்க்க முடியவில்லை"..! பிரதமர் மோடி வருத்தம்.

மேக மூட்டம் காரணமாக தன்னால் முழு வளைய சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை பிரேசில் அதிபருக்கும்....

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோ கடந்த திங்கட்கிழமை தனது குளியல் அறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார். அப்போது அவருடைய பின்னந்தலையில் பலத்த அடிபட்டது