நீலகிரியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு? யானை உயிரிழப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்றுமுன்தினம் 4 வயதுள்ள ஆண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. இதையடுத்து இந்நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

ஆந்த்ராக்ஸ் தொற்றுநோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயத் தன்மை கொண்டது. அதோடு ஒரு விலங்கிடம் இந்த நோய்த்தாக்கம் காணப்பட்டால் தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய மசினகுடி, சிங்காரா, சீகூர் போன்ற பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுயானை, புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலி, செந்நாய்கள், கழுதைப்புலி போன்றவை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 4 வயதான குட்டி யானை துதிக்கை மற்றும் வாய் பகுதியில் ரத்தம் வெளியேறி ஆந்த்ராக்ஸ் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளது. இதையடுத்து நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிறுத்தை சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஜாக்கிரதை மக்களே! மீண்டும் உச்சம் தொடும் சென்னை!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் குறைந்து வந்தது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்ளிட்ட

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ: இணையதளத்தில் வைரல்!

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி: 10 நாட்களுக்கு பின் என்ன செய்தார் தெரியுமா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த நிலையில் பத்து நாட்கள் கழித்து போலீசில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

5 சிறுநீரகங்களுடன் வாழும் அதிசிய மனிதர்....!

வங்கதேசத்தை சேர்ந்தவர் தான் 41 வயதுடைய தீபன் என்ற தொழிலதிபர்.  இவர் சிறியவராக இருக்கும்போதே சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தினால்,