பெரிய இவன்னு நினைப்பு.. பேசாத போடா.. அன்ஷிதா ஆத்திரம் யார் மீது?

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

உன்னிடம் எனக்கு பேச விருப்பமில்லை, பெரிய இவன்னு நினைப்பு என அன்ஷிதா ஆத்திரத்துடன் கூறுகிறார். அவர் முத்துக்குமரனை பார்த்து இவ்வாறு பேசினார் என்பது இன்றைய அடுத்த புரோமோவில் இருந்து தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன், பல இடங்களில் சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வெறுப்பேற்றி வருகிறார். அவருக்கு எதிரான விமர்சனங்கள் பல பதிவாகி வருவதோடு, அவரை பலரும் குறை சொல்லி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு விஷயத்தை கூறும் போது, சுருக்கமாக அழகாக சொல்லாமல், நீளமாகவும் வெறுப்பேற்றும் வகையில் முத்துகுமரன் பேசியதை, நேற்று விஜய் சேதுபதியே மென்மையாக கண்டித்தார் என்பது, நேற்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இவ்வாறு இருக்கும் நிலையில், இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோவில், முத்துக்குமரனிடம் அன்ஷிதா ஆத்திரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நான் விளையாட வந்திருக்கிறேன், நீ என்ன விளையாடும்போது மோசமாக ஏன் தோன்றுகிறது? என்று அன்ஷிதா கேட்க, நான் உங்களை எதிர்த்து விளையாடுகிறேன், அதனால் உங்களுக்கு மோசமாக தான் தோன்றும் என்று முத்துகுமரன் பதிலளிக்கிறார்.

அதற்கு அன்ஷிதா எனக்கு வாழ்க்கையில் நடிக்க தெரியாது, ஆனால் நீ வாழ்க்கையில் நடிக்கிறாய் என்று கூற, நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னால், நான் எப்படி ஒப்புக் கொள்வது? என்று பதிலளிக்கிறார். உடனே அன்ஷிதா எனக்கு உன்கிட்ட பேச விருப்பமில்லை, உன்னிடம் பேச விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இவன்னு நினைப்பு என்று கூறி, அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

இந்த புரோமோவில் இருந்து, இன்றைய எபிசோடில் முத்துக்குமரன் மற்றும் அன்ஷிதா இடையிலான சண்டை தான் கண்டெண்ட் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டிடிஎப் வாசன் நடிக்கவிருந்த 'மஞ்சள் வீரன்' படத்தின் புதிய ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியதாக செய்திகள் வெளியானது

இன்று மாலை 6 மணிக்கு சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் போஸ்டர்..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்ஆர் பிரபு, தனது சமூக வலைதளத்தில் இன்று மாலை தனது அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறி ஒரு போஸ்டரையும்

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான "தொடரி" என்ற திரைப்படம் உருவான நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்தில் இணைந்திருப்பதாக

'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகரின் மனைவி கர்ப்பம்.. 5வது மாத நலங்கு விழா புகைப்படங்கள்..!

சரவணன் மீனாட்சி உள்பட  பல சீரியல்களில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாகி உள்ளதை அடுத்து ஐந்தாவது மாத நலங்கு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.