பிக்பாஸ் வீட்டுக்கு வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? அவர்களுக்கு பதிலாக வெளியேறுபவர்கள் யார்?

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது ஒரு பெரும் திருப்பமாக மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில் அவர்களில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிவிட்டனர். தினேஷ், பிராவோ மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மூன்று வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு பதில் ஏற்கனவே இருக்கும் மூன்று பேர் வெளியேறுவார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. அதிரடியாக உள்ளே வரும் 3 வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வென்றால் பிக் பாஸில் தொடரலாம் என்றும் தோற்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வழி விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அல்லது 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம்: மணப்பெண்ணும் சீரியல் நடிகைதான்.. வைரல் புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியல் நடிகருக்கும்  சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமகள்' சீரியல் நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சி.. கமல் கடும் விளைவுகளை சந்திப்பார்: அரசியல் கட்சி தலைவர் எச்சரிக்கை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இருப்பதாகவும் அதனை உடனே மாற்றி அமைக்க வேண்டும், இல்லாவிட்டால்

மன்சூர் அலிகான் விஷயத்தை அவ்வளவு எளிதில் விட முடியாது:  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எளிதில் விட்டுவிட முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காக்கா - கழுகு குறித்து 'நச்' கருத்து பேசிய லெஜண்ட் சரவணன்...!

 கடந்த சில வாரங்களாக காக்கா கழுகு கதை  சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து லெஜன்ட் சரவணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் ஊடகங்கள் முன்பு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர்