பீட்டர்பாலின் விவகாரத்தில் திடீரென நுழையும் இன்னொரு பெண்: தயாரிப்பாளர் ரவீந்தரின் திடுக்கிடும் தகவல்

வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதும் வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஒரு சில நடிகைகள் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் குறித்து வனிதா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதால் தற்போது மீண்டும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை வனிதா, எலிசபெத் ஹெலன், சூர்யா தேவி, கஸ்தூரி உள்பட ஒரு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் தலையிட்ட நிலையில் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் சமீபகாலமாக இந்த பிரச்சினை குறித்து அவ்வப்போது காரசாரமான பேட்டி அளித்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் அளித்த பேட்டியில் ’பீட்டர் பால் அவர்களுக்கு ஊர்மிளா ஷர்மா என்பவர் குறித்து தெரியுமா? என்றும், அவர் தற்போது நேபாளில் இருக்கிறார் என்றும், நீங்கள் இன்னொரு பேட்டி கொடுத்தால் அவரை நேரலையில் வரவழைக்க நான் தயார் என்றும், அதன்மூலம் அவர் யார் என்பதை தமிழ்நாடே தெரிந்து கொள்ளும்’ என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே நேற்று துணை இயக்குனர் பிரசாந்த் என்பவர் தனது முகநூலில் பீட்டர் பால் தனது மனைவி என்று தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இப்போது பீட்டர்பாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து போராடி வருபவர் இல்லை என்று கூறியதில் இருந்தே இந்த விவகாரம் தலைசுற்ற ஆரம்பித்திருக்கும் நிலையில் திடீரென ஊர்மிளா ஷர்மா என்ற பெண்ணும் இந்த பிரச்சனைக்கு உள்ளே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் தயாரிப்பாளர் ரவீந்தர், அவர் யார் என்பதை இந்த உலகிற்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பயந்துட்டியா குமாரு: வனிதாவை கிண்டல் செய்யும் கஸ்தூரி

வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது குறித்து நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட ஒரு சில நடிகைகள் தங்களுடைய கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்கள்.

அருள்நிதியின் அடுத்த படத்தில் இணையும் வெற்றிமாறன்

'வம்சம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அருள்நிதி அந்த படத்தின் வெற்றியை அடுத்து 'மௌனகுரு' படத்தின் மூலம் அனைவராலும் நல்ல நடிகர் என்று அறியப்பட்டார்.

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது: அமிதாப் குடும்பம் குறித்து லதா மங்கேஷ்கர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

கொரோனா ஒழிப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டியான சென்னை: தமிழக அரசின் சாதனை

சென்னையில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்த்து இந்தியாவே ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பதும் இந்தியாவிற்கே சென்னை ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிம்புவின் 'மாநாடு' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பது தெரிந்ததே