சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,August 04 2022]

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் ‘விருமன்’ பட நாயகியுமான அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா மற்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் காமெடி உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ ’வேலைக்காரன்’ ’நம்ம வீட்டு பிள்ளை’ ’டாக்டர்’ உள்பட பல படங்களில் யோகிபாபு நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானத்திற்கு தோளுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடிகர் சந்தானம் தனது மகனுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் சந்தானத்தின் தோளுக்கு மேல் வளர்ந்து உள்ள நிலையில்

விவாகரத்து ஆனாலும் முன்னாள் மனைவிகளை வாரம் வாரம் பார்ப்பேன்: பிரபல நடிகர் பேட்டி

பிரபல நடிகர் ஒருவர் தான் விவாகரத்து செய்த இரண்டு மனைவிகளை ஒவ்வொரு வாரமும் சென்று பார்ப்பேன் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாளை ரிலீஸாகவுள்ள முன்னணி நடிகரின் திரைப்படத்திற்கு திடீர் தடை: ரசிகர்கள் அதிர்ச்சி!

நாளை வெளியாக உள்ள முன்னணி நடிகரின் படத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்த சன்னிலியோன் செய்த செயல்: வைரல் வீடியோ

கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக நடிகை சன்னிலியோன் செய்த செயல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.. தோழியின் குடும்பத்தை சந்தித்த குஷ்புவின் பதிவு!

நமது தோழிகளை சந்திப்பதும் அவர்களுடன் பிரியாணி சாப்பிடுவதை விட வேறு சந்தோசம் எதுவும் இல்லை என நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது தோழியை சந்தித்தது குறித்து நடிகை குஷ்பு