தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் எப்போது இயங்கும்? வெளியான அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

 

நாளை முதல் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. இதனால் பெரிய நட்டம் ஏற்பட்டதாகவும் அச்சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. மேலும் இந்த இடைப்பட்ட காலங்களுக்கு சாலை வரியை ரத்து செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப் பட்டுள்ளன. எனவே ஆம்னி பேருந்துகளையும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் நாளை (அக்டோபர் 16) முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

வருகிற பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு இந்த பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு உள்ள கொரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியே பேருந்துகள் இயப்படும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

More News

அனுபவமே பாடம்: சொத்து வரி பிரச்சனை குறித்து ரஜினி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரியை குறைக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உங்களை வாழவைத்த மக்களை விட இந்த படம் பெரிதா? விஜய்சேதுபதிக்கு பிரபல இயக்குனர் கேள்வி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்: கமல்ஹாசன் புகழாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போது மூன்றாவது ஆண்டு நடைபெற்று வருகிறது.

அரசியல் ஆக்கப்படுகிறது: '800' திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும்