ரஜினியின் 'அண்ணாத்த' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி உள்பட ஒருசில இடங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் அரசின் அனுமதி கிடைத்ததும் மிக விரைவில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட ஏற்கனவே திட்டமிடப்பட்டு நிலையில் தற்போது கொரோனா காலதாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ திரைப்படம் பொங்கல் 2021ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு பொங்கல் ரஜினியின் பொங்கலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் ’பேட்ட’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரு வருடத்திற்கு இனி தியேட்டரின் நிலை இதுதான்: பிரபல தயாரிப்பாளர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வரும் 17ஆம் தேதி ஊரடங்கு வாபஸ் பெற்றாலும் அதன் பின்னரும் திரையரங்குகள் திறப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

ப்ளாரான்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகளை கடந்துவிட்டது!!! இன்றும் தேவைப்படுகிறார் ஏன்???

ஒரு பெரும்நோய்த்தொற்று பரவலின் போது வெறுமனே மருத்துவர்கள் மட்டும் இருந்தால் போதாது

தமிழக முதல்வருக்கு வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அவருக்கு பல முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் பிறந்தநாள்

ரூபெல்லா நோய்த்தொற்றை விருந்து வைத்து அழைத்தார்களா??? ஆச்சர்யமூட்டும் அணுகுமுறை!!!

தட்டம்மை போன்று தோலில் பொரி பொரியாகக் கொப்பளங்களை தோற்றுவிக்கு&#

இனி, கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்!!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!!

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது