'புஷ்பா' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மீண்டும் விலைமாது கேரக்டரில் அஞ்சலி..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அஞ்சலி மீண்டும் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வெளியான ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படத்தில் விலைமாது கேரக்டரில் அஞ்சலி நடித்திருந்தார் என்பதும் அந்தப் படத்தில் அஞ்சலியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது ’பஹிஷ்கரன்’ என்ற தெலுங்கு வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ள நிலையில் இந்த தொடரிலும் அவருக்கு விலைமாது கேரக்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 19ஆம் தேதி ஜீ5 தெலுங்கு ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் அப்பாவியான விலைமாது கேரக்டர் எப்படி பிரச்சனைகளை சமாளித்து முன்னேறுகிறாள் என்பதுதான் கதை என்றும் இது ஒரு கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட தொடர் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொடர் குறித்து அஞ்சலி கூறியபோது இந்த தொடரில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், புஷ்பா என்றால் மர்மம் என்றுதான் அர்த்தம், பிரச்சனைகளை புஷ்பா எப்படி சமாளித்து முன்னேறுகிறார் என்பதை ஜீ5 ஓடிடியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த தொடரின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த டீசர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள்.. நடிகை அன்னாபென் பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை அன்னாபென்

நடிப்பு பயிற்சியாளர் ஆகிறார் தமிழ் சீனியர் நடிகர்.. அதிலும் எஸ்.எஸ்.ராஜமெளலி படத்திற்கா?

கோலிவுட் திரை உலகை சேர்ந்த சீனியர் நடிகர் நடிப்பு பயிற்சியாளராகிறார் என்றும் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில்

நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்.. 45 வயது விஜய், சூர்யா பட நாயகியின் போட்டோஷூட்..!

விஜய், சூர்யா படங்களில் நாயகியாக நடித்த 45 வயது நடிகை நீச்சல் குளத்தில் ஹாயாக குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில்

திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?

இன்னும் சில ஆண்டுகளில் திரை உலகில் இருந்து விலகப் போகிறேன் என நடிகை துஷாரா விஜயன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மொழிகளில் வெளியாகிறது 'மகாராஜா'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு