நயன்தாராவின் அடுத்த படம் குறித்து அனிருத்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்தின் பாடல்கள் குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

'கோலமாவு கோகிலா' படத்திற்கு இசையமைப்பதை விரும்பி செய்து வருகிறேன். இந்த படத்தின் ஐந்து பாடல்களில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே கம்போஸ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாகும். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது

More News

ஐபிஎல் வடிவில் டிக்கெட் வெளியிட்ட வேல்முருகன் கட்சியினர்

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று போராடிய கட்சிகளில் ஒன்று வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்த

சிம்புவுடன் மீண்டும் ஒரு படம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

வாழும் கடவுளிடம் வாழ்த்த பெற்ற தங்கப்பதக்க தமிழ்மகன்

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே.

கள்ளக்காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த கொடூர பெண்

தாய் என்பவர் உலகிலேயே மிகவும் புனிதமான உறவு என்றும், ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்றும் தான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

வெற்றிக்கு பின் பொறுப்பான தந்தையாக மாறிய தல தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ராயுடு ஆகியோர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் பார்வையாளர்களுக்கு ஒரு வானவேடிக்கை கிடைத்தது.