ஆக்சன் களத்தில் இறங்கும் ''அங்காடித்தெரு'' இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,November 29 2015]

அங்காடித்தெரு', வெயில்', அரவான்', காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். அழுத்தமான கதையுடன் வித்தியாசமான கோணத்தில் படமெடுக்கும் வசந்தபாலன் முதன்முதலாக ஆக்சன் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

என்னுடைய படங்கள் அனைத்துமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுபோல் எனது அடுத்த படம் ஆக்சன் படமாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தம் இருக்கும். புதிய படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த கதைக்கேற்ற நடிகர், நடிகைகள்தேர்வு செய்யப்படுவார்கள் என இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

வசந்தபாலனின் முதல் ஆக்சன் படத்தில் நடிக்கும் ஹீரோ யார்? என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.