'தளபதி 64' படத்தில் இணையும் இரண்டு நடிகைகள்

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளியன்று வெளியாகி ஒருபக்கம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோனி வர்கீஸ் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இருவர் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின்போது இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் இந்த படத்தில் கவர்ச்சியான பேராசிரியரை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இன்னொருவர் வெப் சீரீஸில் நடித்து வரும் பிரிகிதா என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த படத்திற்காக அனிருத் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் அவற்றில் ஒரு பாடலின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும் தெரிகிறது
 

More News

அசுர சாதனை செய்த தமிழக அரசை கிண்டல் செய்த தமிழ் நடிகை!

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரமும் செய்துவிட்டு மதுவையும் விற்பனை செய்து அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுவிற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

குழந்தை சுர்ஜித் நிலை குறித்து உள்ளூர்க்காரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சூர்ஜித் இந்த குழந்தை, வெள்ளி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த குழந்தையை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர் 

ஏடிஎம் மிஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: பெரும் பரபரப்பு 

இதுவரை ஏடிஎம் மிஷினை உடைத்து அதிலுள்ள பணத்தை மட்டுமே திருடர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் தற்போது ஏடிஎம் மிஷினையே தூக்கி சென்றுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை

ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன்