close
Choose your channels

ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார்.. அதிரடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் பவன் கல்யாண்..!

Monday, September 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஜனசேனா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடன இயக்குனராக விளங்கிய ஜானி மாஸ்டர் மீது ஒரு இளம்பெண் பாலியல் புகார் கொடுத்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜானி மாஸ்டர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்தார். இப்போது அவர் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகளால், கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகும்படி ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இது ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜானி மாஸ்டருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்புணர்வு), பிரிவு 506 (மிரட்டல்), மற்றும் பிரிவு 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment