குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை அவமதிக்கப்பட்டாரா? அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,June 01 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை உள்ளனர் என்பது தெரிந்தது. கடந்த சில சீசன்களாக ரக்சன் மட்டுமே தொகுப்பாளராக இருந்த நிலையில் இந்த சீசனில் மணிமேகலை தொகுப்பாளினியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் கடந்த நான்கு சீசன்களிலும் அவர் கோமாளியாக இருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த வார எபிசோடின் முன்னோட்ட வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அதில் மணிமேகலை மீண்டும் கோமாளியாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு இணங்க மீண்டும் மணிமேகலை கோமாளி ஆகிறார் என்று செஃப் தாமு கூறிய நிலையில் மணிமேகலை அதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் காட்சிகளும், புகழ் உட்பட சக கோமாளிகள் அவரை கிண்டல் செய்யும் காட்சிகளும் அந்த முன்னோட்ட வீடியோவில் உள்ளன.

தன்னுடன் கோமாளியாக இருந்த ஷிவாங்கி எல்லாம் குக் ஆகிவிட்ட நிலையில் தான் கோமாளியாகவே இருப்பதை விரும்பாமல் மணிமேகலை கடந்த சீசனில் பாதியிலேயே திடீரென விலகினார், அதன் பிறகு அவரை தொகுப்பாளினியாக கடைசி சில எபிசோடுகள் மட்டும் விஜய் டிவி அழைத்து வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீசனின் ஆரம்பத்தில் இருந்தே தொகுப்பாளினியாக மணிமேகலை செயல்பட்டு வந்த நிலையில் திடீரென அவரை கோமாளி ஆக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விஜய் டிவி தன்னை அவமதித்து விட்டது என்று நினைத்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவாரா? அல்லது தொகுப்பாளினியை விட கோமாளியில் தான் நல்ல ஸ்கோர் செய்ய முடியும் என்று நினைத்து இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பாலாவின் 'வணங்கான்' ரிலீஸ் தகவலை அறிவித்த தயாரிப்பாளர்.. 'இந்தியன் 2' படத்திற்கு முன்பா? பின்பா?

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்  தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை

12 வருடத்திற்கு முன் சிம்பு.. இன்று அதே இடத்தில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!

12 வருடங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு ஒன்றிற்காக சிம்புவுடன் வந்த அதே இடத்தில் தற்போது நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது

சூர்யா-ஜோதிகாவின் வெற்றிப்படம்.. 18 வருடங்கள் கழித்து 2ஆம் பாகத்தில் கவின்?

சூர்யா , ஜோதிகா நடித்த வெற்றி படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யாவுக்கு

பெண்கள் சாதிப்பதற்கு தன்னம்பிக்கை ஒன்று போதும்-ப்ரீத்தா கணேஷ்.

உடனே யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள்.நம்மளுடைய அந்த முக்கியத்துவத்தை நாம் மற்றவர்களுக்கு நிரூபிக்கும்போது தானாகவே நமது குரல் பலமாக ஒலிக்கும்....

பூஜை அறையின் அமைப்பு முறை முதல் கடன் தீர்வு வரை: கிரிஜா செம்மொழி பேட்டி!

புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் கிரிஜா செம்மொழி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பூஜை அறை அமைப்பு முறை, கடன் பிரச்சனை தீர வழிபாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.