அஜித்தின் 'கண்ணான கண்ணே' பாடலை இசைத்த பிரபலத்தின் மகள்!

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன் பாடிய மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பவர் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை பெற்று அதன்பின் தற்போது பாடகாராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘நீயா நானா’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபலமான கோபிநாத்தின் மகள் வெண்பா, ‘கண்ணான கண்ணே’ பாடலை கிடாரில் மிக அருமையாக இசைத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை கோபிநாத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அச்சு அசலாக ‘கண்ணான கண்ணே’ பாடலை கிடாரில் இசைத்துள்ள கோபிநாத்தின் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, வருங்காலத்தில் இசையமைப்பாளராக அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Kannana kanne #Guitar #viswasam #ajith #venbagobinath

A post shared by Gobinath (@gobinathsocial) on Apr 30, 2020 at 9:09am PDT

More News

தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

சென்னையில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 7 பகுதிகள்!

சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் பகுதி என 7 பகுதிகளை கண்டறிந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட

ஒரே தெருவில் 19 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.