30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி மனைவி செளம்யாவின் சகோதரரும் காங்கிரஸ் பிரமுகருமான விஷ்ணுபிரசாத் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விமர்சனம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி கூறியபோது, 'விஷ்ணுபிரசாத் அவர்களை எனக்கு 30 ஆண்டுகாலம் தெரியும். என்னுடன் கல்லூரியில் படித்தவர், எனக்கு 28 ஆண்டுகளாக மைத்துனராக உள்ளார். என்னுடைய மூன்று மகள்களுக்கும் அவர் மடியில் வைத்து தான் மொட்டை எடுத்தோம், காதணி விழா நடத்தினோம்.

ஆனால் தற்போது அவர் எங்களை விமர்சனம் செய்திருப்பதை நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. என்னுடைய 30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டது. இதனால் என்னை விட என்னுடைய மனைவி மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளார்' என்று அன்புமணி தெரிவித்தார்.

More News

ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது

கமல் கட்சியில் இணைந்த பாமகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இணைந்து

எனக்கும் ஒரு நாள் ஆஸ்கார் கிடைக்கும்: விக்னேஷ் சிவன்

2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கிரீன் புக்', 'ரோமா', 'பிளாக் பாந்தர் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதினை அள்ளின.

விட்டா என்னை அடிச்சிருவிங்க போல: செய்தியாளர்கள் சந்திப்பில் திணறிய அன்புமணி

அதிமுக அரசை கடந்த மூன்று வருடங்களாக கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகளில் ஒன்று பாமக. தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து புத்தகமே வெளியிட்ட கட்சியான பாமக,

கவுதம் மேனனின் காதலும் ஆக்சனும்

இவரது ரொமான்ஸ் படங்களில் உள்ள பல காட்சிகளில் ஒருசில காட்சிகள் நிச்சயம் நமது வாழ்வை கடந்திருக்கும். அந்த காட்சியை பார்க்கும்போது அந்த இடத்தில் நம்மை வைத்து பார்ப்பதில் தவற மாட்டோம்...