சீக்கிரமே தமிழ்நாட்டிற்கு வருவேன்: ஆனந்த கண்ணனின் கடைசி வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

சன்டிவி பிரபலமும் தொலைக்காட்சி நடிகருமான ஆனந்த கண்ணன் திடீரென நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் சின்னத்திரை, பெரிய திரை உலகினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தநிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கடைசி வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் பேசும் காட்சிகள் உள்ளன.

கூடிய விரைவில் தான் தமிழ்நாட்டுக்கு வருவேன் என்று அவர் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார். மேலும் விரைவில் வரக்கூடிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்றும் ரசிகர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். மேலும் கூடிய சீக்கிரம் ஒரு ஷோ செய்யப்போவதாகவும் அது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். ஆனந்த கண்ணனின் இந்த கடைசி வீடியோ ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் நடிகை: சசிகுமார் ஜோடியாகிறார்!

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழ் திரையுலகிற்கு திரும்பும் நடிகை ஒருவருக்கு சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 

ஆண்ட்ரியாவுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் 'சார்பாட்டா பரம்பரை' வீரர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு பின்னர்தான் பொதுமக்களுக்கு குத்துச்சண்டை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்!

நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதிக்கு புதிய பட்டம் ஒன்றை பிரபல இயக்குனர் அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்தார்களா? அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியது என்பதும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட

லார்ட்ஸ் மைதானத்தில் 38 வருட சாதனையை முறியடித்த சிராஜ்… கொண்டாடும் ரசிகர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது