அதர்வாவின் 'போதை' படத்தில் பாலியல் தொழிலாளி

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது 'செம போதை ஆகாதே' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அவருடைய முதல் படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் மிஷ்டி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நடிகை அனைகா சோட்டி, இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் பத்ரியும் உறுதி செய்துள்ளார். பொதுவாக பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க ஒருசில நடிகைகள் தயங்கி வரும் நிலையில் அனைகா தைரியமாக இந்த கேரக்டரில் நடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த படத்தில் அதர்வா மற்றும் அனைகாவுக்கு 'கட்டிப்புடி கட்டிப்புடா' டைப்பில் ஒரு பாடல் இருப்பதாகவும் இந்த பாடல் யுவன்ஷங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் யுவன் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், அவற்றில் மூன்று பாடல்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இயக்குனர் பத்ரி மேலும் தெரிவித்துள்ளார்.