வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘பார்ட்டி’. இந்த திரைப்படம் பல மாதங்களுக்கு முன்பே வெளியாக இருந்த நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலமும் வந்து விட்டதால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் ‘பார்ட்டி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்படுவதாவது:

எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பார்ட்டி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒருசில ஊடகங்களில் வெளிவந்த செய்தியை நாங்கள் கவனித்தோம். ஓடிடியில் ரிலீஸ் செய்யும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. எனவே இதுகுறித்த ஆதாரமற்ற வதந்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்.

பார்ட்டி திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவலை சரியான நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறோம். எனவே ‘பார்ட்டி’ படம் குறித்த வதந்திகளை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் திரையரங்கில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More News

கொரோனாவுக்கு மூன்றே மூன்று தீர்வுகள்: வைரமுத்து

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த ஒரு வருடம் மட்டுமே வேண்டவே  வேண்டாம்: ஜெயம் ரவி வேண்டுகோள்

இந்த வருடம் மட்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவில் இணையும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்?  பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர் திடீரென இன்று பாஜகவில் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.