பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு பார்டிகார்டாக இருந்த போலீஸ்… 1.5கோடி சம்பளமா?

பாலிவுட்டில் பிக். பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரபலங்களுக்கு வழங்கப்படும் எக்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பார்டிகார்டாக ஜிதேந்திரா ஷிண்டே எனும் கான்ஸ்டபிள் வேலைப்பார்த்து வருகிறார். இவர் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்தமானவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபலங்களுக்கு ஒதுக்கப்படும் பார்டிகார்டுகள் குறைந்தது 5 வருடங்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் ஷிண்டே தொடர்ந்து 6 வருடமாக நடிகர் அமிதாப் பச்சனுக்கு பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் புகார் எழுந்ததை அடுத்து ஷிண்டே மும்பையின் தெற்று போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

மேலும் ஷிண்டே போலீஸ் வேலையில் வரும் பணத்தைத் தவிர பார்டிகார்டாக இருப்பதன் மூலம் 1.5கோடி சம்பளம் வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரை அடுத்து ஷிண்டேவிற்கு யார் இந்தப் பணத்தைக் கொடுத்தார்கள் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த ஷிண்டே நான் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன். இதன்மூலம் மும்பையில் இருக்கும் பல பிரபலங்களுக்கு தேவைப்படும் சேவைகளை வழங்கி வருகிறோம். அந்த நிறுவனத்தை என்னுடைய மனைவியே கவனித்து வருகிறார்.

இதனால் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு புகார் அளித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நடிகர் அமிதாப் பச்சனிடம் இருந்து எந்த சம்பளமோ அல்லது சன்மானமோ வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் அமதாப்பச்சன் பார்டிகார்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக வலம்வரும் தகவல் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' நடிகர்களின் செல்பி புகைப்படம்: இணையத்தில் வைரல்

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜெயம் ரவி தன்னுடைய

துருவ்-மாரிசெல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷ் நடித்த 'கர்ணன்' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும்

நடிகர் விமல் கொடுத்த புகார்… தயாரிப்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

“களவாணி“ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகர் விமல் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சினிமா தயாரிப்பாளர்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அரேபியன் பாடலா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே.

ஹரி-அருண்விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ்ராஜ்....! அந்த ரோலுக்கு பிரபல இயக்குனர்....?

அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க, நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை ஒப்பந்தம் செய்திருந்தனர்