2.0 படத்தில் திடீரென இணைந்த அமிதாப்-அபிஷேக். புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,March 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே அறிவித்தோம். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
டெல்லி ஜவஹர்கால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இந்தியன் கால்பந்து லீக் போட்டிகளில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டதாகவும், ரஜினிகாந்த் மற்றும் அக்ஷயகுமார் ஆகிய இருவரும் இந்த இரு அணிகளின் கேப்டன்களாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படப்பிடிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்ததாகவும், கால்பந்து அணியின் உரிமையாளர்களாக இவர்கள் இருவரும் நடித்திருக்க கூடும் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் வில்லன் வேடத்திற்கு அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அமிதாப்பச்சன் சிறப்பு வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

More News

'தல 57' படம் குறித்த புதிய தகவல்

'வேதாளம்' வெற்றி படத்திற்கு பின்னர் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 57' படத்தை இயக்குபவர் சிறுத்தை சிவா என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதியாகியுள்ள நிலையில்....

பாஜகவுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததில் இருந்து கோலிவுட் திரையுலகினர் பலர் அந்த கட்சியில் சேர்ந்தவண்ணம்...

ஷங்கரின் 2.0 படத்தில் எத்தனை பாட்டு. ராஜுமகாலிங்கம் விளக்கம்

ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமும் பாடல்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அவருடைய முதல் படமான ஜெண்டில்மேன்...

விக்ரம் படத்தை மிஸ் செய்த கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பை இயக்குனர் விஜய் மில்டன் கொடுத்ததாகவும்...

இறுதிக்கட்டத்தில் சுந்தர் சியின் அடுத்த படம்

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'அரண்மனை 2' படத்தையடுத்து அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் முடிந்துவிட்டதாகவும்...