டெல்டாவை விட மோசமான வைரஸ் கண்டுபிடிப்பு… அலறும் விஞ்ஞானிகள்!

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு காரணமான டெல்டா வைரஸை பார்த்து தற்போது உலகமே நடுங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்தக் கொரோனா வைரஸ் இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக WHO தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புது உருமாறிய வைரஸ் ஒன்று பெரூ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் ஒருவரின் உடலில் 82% பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர். மேலும் லாம்ப்டா வேரியண்ட் எனப்படும் இந்த வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரூ நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கண்டறியப்பட்ட லாம்ப்டா வேரியண்ட் தற்போது பிரிட்டனில் பரவி இருக்கிறது. இதுவரை 6 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறும் பிரிட்டன் சுகாதாரத்துறை இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதாக இருக்கிறது என்றும் அச்சம் வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை வைரஸால் பிரிட்டன் கடும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட லாம்ப்டா வேரியண்ட் வகை வைரஸ் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கடும் கவலை வெளியிட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி வீரியத்தை இது குறைத்து விடும் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், அமெரிக்கா என பல நாடுகளில் புது வேரியண்ட்களை உருவாக்கி இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தோன்றிய டெல்டாவும் (B.1.617.2), இங்கிலாந்தில் தோன்றிய ஆல்பாவும் (B.1.1.7) அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி நிலையில் புதிதாக பெரூ நாட்டில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாதோ என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை சாந்தினி: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை வரவழைத்த படம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து

ஹீரோவாகும் இயக்குனர் பிரபுசாலமன் மகன்: டைட்டில் அறிவிப்பு

கும்கி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் மகன் ஹீரோவாகும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்ஸ்டா மூலம் ஆசை வார்த்தை...! சிறுமியை ஏமாற்றிய இயக்குனர் கைது...!

17 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி, பாலியல் தொல்லை செய்த இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் போற்றப்பட்ட ஒரு உன்னத முத்தம்? சுவாரசியப் புகைப்படம் வைரல்!

உலகம் முழுவதும் நேற்று (ஜுலை 6)ஆம் தேதி சர்வதேச முத்தத்தினம் கடைப்பிடிக்கப் பட்டது.