கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் எந்த கடையிலும் டாய்லெட் பேப்பர் இல்லை என்றும் பொதுமக்கள் அவற்றை மொத்தமாக வாங்கி தங்கள் வீடுகளில் குவித்து  வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் பெரும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் அத்தியாவசிய பொருள்களை கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாக நடமாடி வருவதாகவும் அவர்களிடம் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் துப்பாக்கிகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது 

கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமானோர் துப்பாக்கிகளையும் அதற்கான தோட்டாக்களையும் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து யூஎஸ் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள ஒருவர் ’தான் வாங்கி வைத்திருக்கும் அத்தியாவசியமான பொருட்களை பாதுகாக்கவும் தனது குடும்பத்தினரை பாதுகாக்கவும் 1500 டாலர் கொடுத்து துப்பாக்கி வாங்கி இருப்பதாக கூறியுள்ளார் 

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வாங்க அதிக அளவில் துப்பாக்கி வாங்க முன்வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும்,

'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில்

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன 

த்ரிஷாவுக்கு பதில் யார்? சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' நாயகி குறித்த தகவல்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிவரும் 'ஆச்சாரியா' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா திடீரென அந்த படத்திலிருந்து விலகினார்