'உயிர் தமிழுக்கு' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றும் ஓரளவு சுமாரான வசூல் செய்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ள இயக்குனர் அமீர், இந்த படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு. ஆதம்பாவா அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நான் முதன்மை பாத்திரமேற்று நடித்து வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவையும் என்னுடைய நடிப்பிற்கும் நீங்கள் தந்த பாராட்டுதலையும், தங்களின் மேன்மையான விமர்சனங்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

மேலும் உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரு. பொன்வண்ணன், திரு. கரு.பழனியப்பன், திரு. SR. பிரபாகர், திரு. சிநேகன், உள்ளிட்டோருக்கும், திரைப்படம் வெளியான போது வாழ்த்து தெரிவித்த தம்பி சசிகுமார் நண்பர் சேரன் உள்ளிட்டோருக்கும் திரைப்படத்தை பார்த்துவிட்டு உளமார பாராட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் நண்பர் வெற்றிமாறன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள், உறவுகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

More News

எதிர்பார்த்தது நடந்துவிட்டது.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

இந்தியா - பப்புவா நியூ கினியா இணையும் படத்தை தயாரிக்கும் பா ரஞ்சித்.. டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரு நாடுகளின் திரையுலகில் இணையும் படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா படம் டிராப்.. 2 முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுதா கொங்கரா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தால் 'புறநானூறு' திரைப்படம் கிட்டதட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும்

ஒரே நாளில் 2 படங்கள் அறிவிப்பு.. இரண்டும் சொந்த படங்கள்: ராகவா லாரன்ஸ்

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட போவதாகவும் இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பு என்றும் அறிவித்துள்ளதை அடுத்து

நடிகை சாயாசிங் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.