என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை.. தயாரிப்பாளர் குறித்து அமீர்..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

டெல்லியில் ரூபாய் 2000 கோடி போதை மருந்து கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் உண்டு என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்தில் ஜாஃபர் சாதிக் என்ற தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் இன்னொரு படம் தான் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படம். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்திற்கும் அமீருக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியான நிலையில் தற்போது அமீர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!

கடந்த இரண்டு நாட்களாக, எனது இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22-ம் தேதி நான் ’இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.

எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.

அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.

More News

வேற லெவலில் மாஸ் லுக்.. சிம்புவின் 'எஸ்டிஆர் 48' செம்ம வீடியோ..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'எஸ்டிஆர் 48' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளியை அடுத்து இன்னொரு நாயகி.. தனுஷ் வெளியிட்ட 'ராயன்' போஸ்டர்..!

தனுஷ் நடித்துள்ள 'ராயன்' திரைப்படத்தில் ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியும் நடித்துள்ளதாக சற்றுமுன் தனுஷ்

அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் திடீர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெருங்கிய நண்பர் இயக்கும் படத்தில் கவின்.. இணையும் சிவகார்த்திகேயன் பட நாயகி..!

'டாடா' என்ற ஒரே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து கவினுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் இயக்கும்

'தனி ஒருவன் 2' படத்தை அடுத்து இன்னொரு 2ஆம் பாக திரைப்படம்.. மோகன் ராஜா மாஸ் திட்டம்..!

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'தனி ஒருவன்' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து