விஜய் நினைத்து இருந்தால் வேற மாதிரி ஆகியிருக்கும்: நெய்வேலி பாஜக போராட்டம் குறித்து அமீர்

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது:

விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்தது ஆதாரத்தின் அடிப்படையிலா? அல்லது அரசியல் அச்சுறுத்தல் அடிப்படையிலா? என்பதே சந்தேகமாக உள்ளது. 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது அவசர அவசரமாக விஜய்யை அழைத்து வந்து வருமானவரித் துறையினர் விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கான கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்திருக்கலாம். இதற்கு முந்தைய வருமானவரி சோதனைகளில் இருந்து பார்க்கும்போது விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது ஒரு அரசியல் பின்னணி இருப்பதாகத்தான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

அதேபோல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் போராட்டம் நடத்தியது என்பது கொச்சையானது. இதேபோல் 10 பேர் கொடியைத் தூக்கிக் கொண்டு எல்லா இடத்திலும் போராட்டம் செய்தால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தில் ரொம்ப மெச்சூரிட்டியாக நடந்து கொண்டார் என்றுதான் நான் நினைக்கின்றேன். அவர் நினைத்திருந்தால் தனது ரசிகர்களை பாதுகாப்புக்கு நிறுத்தி இருக்கலாம். அவ்வாறு நிறுத்தி இருந்தால் அங்கே மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதனை விஜய் தவிர்த்து மெச்சூரிட்டியாக நடந்து கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
 

More News

எத்தனை பிரச்சனை இருந்தாலும் ரசிகர்களை பார்த்ததும் புன்னகைக்கும் தளபதி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளில் விஜய் மற்றும் விஜய்யின் படங்கள் சந்தித்த பிரச்சனைகளை போல் வேறு எந்த நடிகரோ அல்லது அவரது படங்களுக்கோ இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்: என்ன அறிவிப்பு தெரியுமா?

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சுருளி' என்ற

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கெட்டப் இதுதான்: வைரலாகும் புகைப்படம்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல நீங்கள் யார்? டுவிட்டர் பயனாளியை வறுத்தெடுத்த டாப்சி

'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின்னர் 'வை ராஜா வை', ஆரம்பம்' உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட்டில் பிசியான

ஏப்ரலில் கட்சி, பாமகவுடன் கூட்டணி: அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வருகை: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் ஏப்ரலில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது