close
Choose your channels

நானும் சங்கடங்களை சந்தித்துள்ளேன். சுசி கணேசன் குறித்து அமலாபால்

Wednesday, October 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுசி கணேசன் அவர்கள் 'திருட்டுப்பயலே' திரைப்படத்தை இயக்கியபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கவிஞர் லீலா மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீடூ குற்றச்சாட்டை கூறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அந்த படத்தின் நாயகியான அமலாபால், தனக்கும் இயக்குனரால் சில சங்கடங்கள் இருந்தன என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

'திருட்டுப்பயலே' படத்தில் நான் நடித்தபோது இயக்குனர் சுசிகணேசனின் இரட்டை அர்த்த தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று கூறியுள்ளார். மேலும் நான் லீலா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டை ஆதரிக்கின்றேன். பெண்ணியத்துக்கு சிறிதும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதர் சுசிகணேசன் என்று அமலாபால் கூறியுள்ளார்.

மேலும் அரசும், நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை சட்டரீதியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அமலாபால் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment